News August 24, 2024
அறந்தாங்கி அருகே ஆம்லெட் கேட்டு ஆண் கொலை

அறந்தாங்கி அடுத்த வல்லவாரி கிராமத்தில் உள்ள ஹோட்டலில் இன்று சாப்பிட்டுக் கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஆம்லெட் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட நேரத்திற்குள் ஆம்லெட் வராததால் ஹோட்டல் உரிமையாளரிடம் சண்டை அடித்துள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் ‘ஏயா, இப்படி சண்டை போடுகிறீர்கள்’ என்று கேட்டுவிட்டு வந்து சமாதானம் செய்தனர். இதில் சமாதானம் செய்ய வந்த நபர் ஒருவரை தாக்கி அவர்கள் கொலை செய்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
புதுகை: கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(17). வேளாண்கல்லூரி முதலாமாண்டு மாணவரான இவர் சரியாக கல்லூரிக்கு செல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்ததோடு கைப்பேசியையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 6, 2025
புதுகை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
புதுகை: கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள சிறு வலத்தூர்-கருப்பன் கோவில் பூசாரி தங்கவேல் தேவர் (55) கோவில் மைக் போடும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் உள்ள கிராமத்து பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் இது குறித்து ஜெகதாபட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


