News January 31, 2025
அறந்தாங்கியில் 108 வாகனம் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கி வரும் போது வாமுனி கோவில் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 108 வாகனம் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தில் வந்த கர்ப்பிணி பெண்ணை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News March 6, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி போட்டிக்கான 22,195 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரசு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் போது கட்டணம் இல்லா பாட குறிப்புகள் வழங்கப்படும். https://tamilnaducareer service.in gov.in இணையதளத்தில் பாடக்குறிப்பு வழங்கபடும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
புதுக்கோட்டை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

புதுக்கோட்டை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
புதுக்கோட்டை: 190 பெண்கள் உட்பட 390 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 180 பெண்கள் உட்பட 390 பேரை போலீசார் கைது செய்தனர்.


