News February 25, 2025
அறநிலையத்துறை ஊழியரின் கணவர் மர்மச்சாவு

ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(41) இவரது மனைவி சுதா தி.மலை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் கிளார்காக வேலை செய்து வருகிறார். 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரபு, மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அவர், வராஹி அம்மன் கோயில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து,போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 3, 2026
மு.பெ.கிரி வெற்றிபெற வேண்டி அழகு குத்திய திமுக நிர்வாகி

மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் செங்கம் சட்டமன்ற வேட்பாளராக மு.பெ.கிரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டி கீழ்வணக்கம்பாடியில் பங்குனி உத்திர திருவிழாவில், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அர்ஜுன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News April 2, 2026
FLASH – தி.மலை: வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், ராமதாஸ், அஇபுதமமுக-வுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதில், தி.மலை மாவட்டம் செங்கம் – குயிலம் செல்வம், கலசப்பாக்கம் – ம.சுமன், போளூர்-ரா.மணிகண்டன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லுங்க.
News April 2, 2026
தி.மலை: செலவு இல்லாமல் கேஸ் போடலாம்!

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.


