News April 26, 2024

அரூர்: மின்சாரக் கம்பியை மிதித்த பெண் பலி

image

அரூர் தென்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்த அம்பிதுரை மனைவி அனிதா(38). இவர் நேற்று(ஏப்.25) தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் திரும்பவில்லை. அவரை தேடி கணவர் சென்றபோது
ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். வனவிலங்குகள் வருவதை தடுக்க அமைத்த மின்கம்பியை அனிதா தெரியாமல் மிதித்து உயிரிழந்து தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News September 19, 2025

தர்மபுரியை நெருங்கும் ஆபத்து – உஷார் மக்களே!

image

தர்மபுரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கே.ஆர்.பி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகளவிலான உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தர்மபுரி தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News September 19, 2025

தர்மபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தர்மபுரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

தர்மபுரி: மழைக்காலத்தில் இது இருந்தால் போதும்!

image

தர்மபுரி மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!