News September 6, 2025

அரூர்: உயர்கல்விக்கு சேராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில், 2022 முதல் 2025 வரை 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்விக்கு சேராத மாணவ, மாணவிகளுக்காக, தமிழக அரசின் ‘உயர்வுக்கு படி’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 8-ம் தேதி அன்று அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு, மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News September 7, 2025

தர்மபுரி: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். இங்கு <>கிளிக்<<>> செய்து download செய்து கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க. <<17637725>>தொடர்ச்சி<<>>.

News September 7, 2025

தருமபுரி: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (04342-230000). ஷேர் பண்ணுங்க

News September 7, 2025

தர்மபுரியில் காவலர் தினம் கொண்டாட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பணியின் போது உயிரிழந்த தருமபுரி மாவட்ட போலீசார் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. S. மகேஸ்வரன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் துப்பாக்கி கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.

error: Content is protected !!