News August 25, 2024

அரூரில் கஞ்சா பதுக்கி விற்று மூன்று பேர் கைது

image

அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவமனை முன்பு சந்தேகப்படும்படி இருந்த சக்திவேல், பரத், விநாயகம் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Similar News

News July 6, 2025

தர்மபுரி; உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு ( 04342-296188) தொடர்பு கொள்ளுங்கள். *10th முடித்த நண்பர்களுக்கு பகிருங்கள்* <<16962456>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

image

சைக்கிள், பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

தர்மபுரி கலெக்டர் தெரிவித்த செலவு விவரங்கள்

image

தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2021-25ஆம் ஆண்டு வரை ரூ.18.09 கோடி மதிப்பீட்டில் 298 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், (NNT) 2021-25ஆம் ஆண்டுவரை ரூ.13.04 கோடி மதிப்பில் 228 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.52.45 கோடி மதிப்பீட்டில் 1959 பணிகள் நடைபெற்றது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!