News September 5, 2024

அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை – எஸ்.பி

image

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசு பள்ளி சமையலறை கதவு பகுதியில் மனித மலம் பூசிய விவகாரத்தில் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக எச்சரித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

திருச்செங்கோடு: காப்பர் ஒயர்களை திருடிய 8 பேர் கைது

image

திருச்செங்கோடு நகரம் ஈரோடு ரோடு பகுதியில் பி.எஸ்.என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான காப்பர் ஒயர்களை திருடிய எட்டு பேர் கைது ஒரு லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடப் பயன்படுத்திய பொலிரோ கார் பறிமுதல், செய்தனர். நீதிபதி 8 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பிஎஸ்என்எல் நிறுவன இளநிலை பொறியாளர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

News November 14, 2025

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடனான ஆலோசனை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

News November 14, 2025

நாமக்கல் : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

error: Content is protected !!