News January 15, 2026

அருப்புக்கோட்டை: வைரலான வீடியோவால் போலீசார் அதிரடி

image

அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து கல்லூரி முன்பு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று பொது மக்களை அச்சுறுத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று டவுன் போலீசார் அந்த மாணவர்களை அழைத்து தக்க அறிவுரை வழங்கி இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தலா ரூ.11,000 அபராதம் விதித்தனர்.

Similar News

News February 8, 2026

விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 8, 2026

விருதுநகர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விருதுநகர் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

சாத்தூர் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை

image

சாத்தூர் அருகே ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்தவர் ஜேசு மனைவி முத்துக்கனி(47). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!