News October 8, 2025
அருப்புக்கோட்டையில் பேருந்து கட்டணம் உயர்வு?

மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை – மதுரைக்கு ரூ.40 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வசூலிக்கப்படுகிறது. எலியார்பத்தி சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் புகார் எழுந்த நிலையில் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 8, 2025
சிவகாசியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

சிவகாசி அருகே ஈஞ்சார் தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (20). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பரணி ராஜன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
News October 8, 2025
சிவகாசி டி.எஸ்.பி அதிரடி மாற்றம்!

சிவகாசி டி.எஸ்.பி பாஸ்கரன் தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிவகாசி டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த இவர் தற்போது விழுப்புரம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். சிவகாசிக்கு விரைவில் புதிய டி.எஸ்.பி நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 8, 2025
விருதுநகர் மக்களே கேஸ் மானியம் வேண்டுமா?

விருதுநகர் மக்களே, உங்க ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியலையா? முதலில் ஆதார் எண், வங்கி கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். பின்னர் <