News April 27, 2024

அருப்புக்கோட்டையில் இளைஞர்கள் மோதல்

image

அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெயக்குமாருக்கும் தம்மாந்தெருவை சேர்ந்த அம்பரேஷ் (27) என்பவருக்கும் இடையே பார்சல் டெலிவரி செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.டவுன் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News October 12, 2025

சாத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(55) சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்று வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாத்தூரில் இருந்து மீனம்பட்டி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மேட்டமலை அருகே நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 12, 2025

சிவகாசி: அடுத்தடுத்து அலறிய சைரன்கள்

image

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1100 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை
23 வெடி விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 37 காயமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 1.07.2025 அன்று சின்னக்காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

News October 12, 2025

விருதுநகர்: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

image

மத்திய அரசு சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. அரசு நகர்ப்புற, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும்.

error: Content is protected !!