News November 3, 2025
அரியலூர்: 2 நாட்களில் 68 வழக்குகள் பதிவு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காவல் துறையினர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர். அதன்படி பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 34 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 34 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனஅரியலூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 3, 2025
அரியலூர்: நான்கு வழி சாலையை திறந்த முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (நவ.3) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக, அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழித் தடத்திலிருந்து, நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள, விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், மதனத்தூர் சாலை கி.மீ 6.8 முதல் 27.6 வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
News November 3, 2025
அரியலூர்: 12th போதும்..ரூ.71,900 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 3, 2025
அரியலூர் அருங்காட்சியகம் பற்றி ஓர் பார்வை!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசியில் புதைபடிவ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் டைனோசர் முட்டைகள் மற்றும் பல புதைபடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரியலூர் புவியியல் அமைப்பில் கடல் புதைபடிவங்கள் அதிகம் காணப்படுவதால், இந்த அருங்காட்சியகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அருங்காட்சியகம், மாணவர்களுக்கு புவியியல் மற்றும் தொல்லியல் பற்றிய அறிவை மேம்படுத்த உதவுகிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


