News November 1, 2025
அரியலூர்: வீடு தேடி வருகிறது – ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான குடிமைப் பொருள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீட்டிற்கே சென்று நவ.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
அரியலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், த.பழூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று நவ.1ம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக த.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (31/10/2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
News October 31, 2025
அரியலூர்: ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


