News July 6, 2025
அரியலூர்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்?

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 23, 2025
அரியலூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
அரியலூர்: ITI போதும் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 23, 2025
அரியலூர்: இலவச சட்ட உதவி மையம் திறப்பு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை தோறும் செயல்படும். இதனை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி தங்களின் பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவியை பெறலாம். மேலும், 24 மணி நேரமும் சட்ட உதவி பெற இலவச எண் 15100 என்பதை அழைக்கலாம் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர்வாலண்டினா அறிவுறுத்தியுள்ளார். SHARE IT..