News November 22, 2025
அரியலூர்: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 22, 2025
அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இம்மைங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் வாக்கு செலுத்தும் மையங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
அரியலூரில் அதிகபட்சமாக 6CM மழை பதிவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.21) காலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. அவ்வகையில் இன்று (நவ.22) காலை 6 மணி வரை அதிகபட்சமாக மீன்சுருட்டி பகுதியில் 6CM மழை பதிவாகியுள்ளது. மேலும் ஓட்ட கோவில் பகுதியில் 36 மில்லி மீட்டர், காட்டாத்தூர் பகுதியில் 23.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
News November 22, 2025
அரியலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

அரியலூர் மாவட்டம் வீரபோகம் நடுத்தெருவை சேர்ந்தவர் அனிதா. இவர் கல்லூரி படித்துவிட்டு, தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்காக படித்து வருகிறார். இந்நிலையில், அனிதாவின் அண்ணனான அருண் சம்பத்துக்கு பழக்கமான 2 பேர். ரூ.12 லட்சம் கொடுத்தால் அனிதாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 2018 தேர்வெழுதிய அனிதாவும் 10 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து மீன்சுட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.


