News November 16, 2025

அரியலூர்: லாரியில் மோதிய வாலிபர் பாலி!

image

அரியலூர், பொய்யூரை சேர்ந்த பாலமுருகன் (24), இவர் நேற்று காலை உறவினரான ஜனனி (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலமுருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் பால முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த ஜனனி காயங்களுடன் உயிர் தரப்பினார்.

Similar News

News November 16, 2025

அரியலூர்: ஆசிரியர் தகுதித் தேர்வு!

image

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், கயர்லா பாத், செந்துறை, கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் டெட் பேப்பர் 2 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதி வருகின்றனர்.

News November 16, 2025

அரியலூர்: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <>இங்கே <<>>க்ளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

News November 16, 2025

அரியலூர்: திருட்டில் உடந்தையாக இருந்த 5 போலீசார்!

image

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி, பொதுமக்களிடம் முறையான அணுகுமுறையின்றி கடுமையாக நடந்து கொண்டது, மணல் திருட்டில் குற்ற வாளிகளுக்கு உடந்தையாக இருந்தது மற்றும் போலீசாரின் தனிப்பிரிவில் இருந்து கொண்டு முறையாக தகவல்கள் அளிக்காத போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி தூத்தூர் மற்றும் விக்கிரமங்கலம் போலீசை சேர்ந்த 5 போலீசாரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!