News December 14, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 18, 2025

அன்புமணி மகள்: ஜெயங்கொண்டம் தொகுதிக்கு விருப்பமனு

image

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் தமிழ் மறவன் சென்னையில், பாமக சார்பில் விருப்ப மனு அளிக்கும் நிகழ்வில், அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா, ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட வேண்டி விருப்ப மனு அளித்தார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News December 18, 2025

அரியலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

அரியலூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

அரியலூர்: தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டிச.20-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 8, 10, 12 மற்றும் டிகிரி முடித்த தகுதியுடைய நபர்களை 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!