News December 12, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.11) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 18, 2025
அரியலூர்: தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டிச.20-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 8, 10, 12 மற்றும் டிகிரி முடித்த தகுதியுடைய நபர்களை 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
அரியலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

அரியலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. இங்கு <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…
News December 18, 2025
அரியலூர்: பழமையான மரகத லிங்கம் திருட்டு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள இலையூர் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த சிவ ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரகதலிங்கம் பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து, மரகத லிங்கத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


