News December 18, 2025
அரியலூர்: மூதாட்டி தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமம் தெற்கு கரைமேடு தெருவைச் சேர்ந்தவர் ராமாமிர்தம் (70). இவர் ஆஸ்துமா பிரச்சினை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராமாமிர்தம் தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News December 19, 2025
அரியலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் உதவி

அரியலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
அரியலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் உதவி

அரியலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
அரியலூர்: சிறந்த காவலர்களுக்கு பாராட்டு

அரியலூர் மாவட்ட காவல்துறையில், பல்வேறு காவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை சிறப்பிக்கும் விதமாக, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி நேற்று நேரில் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


