News December 14, 2025

அரியலூர் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்டத்தில், பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிய அனுமதி பெற்ற பிறகு அதனை பயன்படுத்த வேண்டும். மேலும் யாராவது அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளர்.

Similar News

News April 8, 2026

அரியலூர்: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

அரியலூர்: ஆண்களை விட பெண்களே அதிகம்

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,60,565 ஆண் வாக்காளர்களும்; 2,65,799 பெண் வாக்காளர்களும்; 28 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 5,26,392 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே 5,234 பேர் அதிகம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

அரியலூர்: வித்தியாசமாக தேர்தல் விழிப்புணர்வு!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருபகுதியாக நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கேஸ் சிலிண்டகளில் “தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா, ஏப்ரல் 23 அன்று 100% வாக்களிப்போம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

error: Content is protected !!