News September 20, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் அக்டோபர் 24ம் தேதி மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 30ம் தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News September 20, 2025
அரியலூர் மாவட்டத்தில் இன்று பவர் கட் !

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அரியலூர், தேளூர், உடையார்பாளையம், இடையார், செந்துறை, பொய்யாதநல்லூர், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், ஓ.கூத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 20, 2025
அரியலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News September 20, 2025
அரியலூர்: கடன் தொல்லையால் தற்கொலை

மீன்சுருட்டி அருகே அய்யப்பன் நாயகன்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (29). இவர் வேலைக்கு செல்லாமல் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது . இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான சதீஷ், கடந்த செப்.17-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாப்பாக்குடி அருகே ஓர் தோட்டத்தில் சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.