News August 15, 2024

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

அரியலூர் ஆண்டிமடம் ஒன்றியம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. வீ.அருமைராஜ், அனைத்து திட்டக் கூறுகளிலும் மிகச்சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கினார்.

Similar News

News November 5, 2025

அரியலூர் மாவட்டத்தில் இப்படி ஓர் இடமா ?

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

அரியலூர்: பேருந்து மோதி 93 வயது முதியவர் பலி

image

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி பிச்சப்பிள்ளை (93). இவர் ஆமணக்கந்தோண்டியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து வந்தபோது அவருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பிச்சப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

அரியலூர்: படிவம் வழங்கும் பணி-ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவம் நேற்று முதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், படிவம் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர், அரியலூர் கோட்டாச்சியர், அரியலூர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!