News December 29, 2025
அரியலூர் மாவட்டம் காவலர்கள் ரோந்து பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல், இன்று(டிச.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 21, 2026
ஆசியாவின் மிகப்பெரிய யானை!

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
News January 21, 2026
அரியலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 21, 2026
அரியலூரில் 600 ஆண்டு பழமையான அரண்மனை

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள அரண்மனை 600 ஆண்டுகள் பழமையானதாகும். இது சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 60 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதை கட்டியவர் சின்ன நல்லப்ப உடையவர் என்று கூறுகிறார்கள். இவர் தனது அரண்மனையை கட்டிய பின், அரண்மனையைச் சுற்றி பல கிராமங்களை உருவாக்கி இருக்கிறார் என்றும் அதனாலேயே உடையார்பாளையம் உருவானதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க


