News September 19, 2025
அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

அரியலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அதன்படி அரியலூரில் 14.2 மி.மீ, திருமானூர் 30 மி.மீ, ஜெயங்கொண்டம் 30 மி.மீ, செந்துறை 10 மி.மீ, ஆண்டிமடம் 6.2 மி.மீ, சித்தமல்லி நீர்த்தேக்கம் 67 மி.மீ, குருவாடி 15 மி.மீ, தா.பழூர் 43 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW
Similar News
News September 19, 2025
அரியலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

அரியலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
அரியலூர் மாவட்டத்தில் நாளை பவர் கட் !

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அரியலூர், தேளூர், உடையார்பாளையம், இடையார், செந்துறை, பொய்யாதநல்லூர், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், ஓ.கூத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 19, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செந்துறை வட்டாரத்தில் உள்ள குமிழியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம், குமிழியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் (செப்.20) நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் சிறப்பு மருத்தவர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.