News November 1, 2025

அரியலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், த.பழூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று நவ.1ம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக த.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 2, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (நவ.01) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

News November 1, 2025

அரியலூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> tabcedco.net<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News November 1, 2025

அரியலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

அரியலூர் மக்களே.. வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!