News November 25, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாளை அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News

News August 9, 2025

அரியலூர் பறவைகள் சரணாலயம் பற்றி தெரியுமா?

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!

News August 9, 2025

தா.பழூர்: மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

image

அரவிந்த் கண் மருத்துவமனை தா.பழூர் லயன்ஸ் சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் (ஆக.,10) காலை 8 மணி முதல் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. முகாமில் பார்வைத் திறன் குன்றியோர் தங்களது ஆதார் கார்டு நகலை எடுத்து வந்து பதிவு செய்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், எம்.எல்.ஏ கு.சின்னப்பா, அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!