News January 15, 2026
அரியலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நலவாரியத்தின் மூலம் உதவித்தொகை பெற்று அல்லது பெற விண்ணப்பித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அரியலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
அரியலூர்:மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காலமுறை ஊதியத்தில் பல்வேறு டெக்னீசியன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் டயாலிசிஸ், இஎம்ஜி, எக்ஸ்ரே டெக்னீசியன்கள், பேச்சு சிகிச்சையாளர், விபத்து காயப்பதிவு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் ஜன.6-ஆம் தேதிக்குள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் என்ற முகவரியில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தொலை உணர்வு மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவின் ஆணையின்படி, தனியார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனிம வளங்களை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட உள்ளது. மேலும் ஆய்வு பணிக்கு வானூர்தி பயன்படுத்தப்பட உள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்கள் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், இதுகுறித்து புகார் தெரிவிப்பதை தவிர்க்க ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.27) இரவு 10 முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


