News October 5, 2025

அரியலூர்: மதுபோதையில் அட்டூழியம்!

image

உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இடையார் பிரிவு சாலையில் 3 பேர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக புகார்வந்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு சேட்டு (52), ராஜசேகர் (34), சுரேஷ் ஆகியோர் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்தது 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News March 28, 2026

அரியலூர் தொகுதியை கைப்பற்றுமா அதிமுக?

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் அரியலூர் தொகுதி அதிமுகவிற்கும், ஜெயங்கொண்டம் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் தொகுதியில் அதிமுக சார்பில் மு.தலைமைக் கொறடாவான தாமரை S.ராஜேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்தமுறை அரியலூர் தொகுதியை திமுக கூட்டணி கட்சியான மதிமுக கைப்பற்றிய நிலையில் இம்முறை அதிமுக கைப்பற்றுமா? என கேள்வி எழுந்துள்ளது.

News March 28, 2026

அரியலூரில் நீதிமன்ற கட்ட அடிக்கல் நாட்டல்

image

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி சுதிர் குமார் கலந்து கொண்டு, அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 28, 2026

அரியலூர்: கள்ள நோட்டு அடிக்க உதவியவர் கைது!

image

நாகை மாவட்டம், தாணிக்கோட்டத்தில் வாய்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த முருகானந்தம் (40) என்பவரிடம் விசாரித்ததில், அவர் கள்ள நோட்டு அடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், அரியலூர் மாவட்டம், குவாகத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர், கள்ள நோட்டு அடிக்க உதவியது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!