News September 9, 2025

அரியலூர்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் பல்வேறு நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் என மொத்தம் 3644க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் வரும் 12ம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 9, 2025

அரியலூர்: ஆசிரியர் தேர்வுக்கு நாளை கடைசி நாள்!

image

அரியலூர் மக்களே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே <>https://trb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 9, 2025

அரியலூர் வருகை புரிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

image

அரியலூர் மாவட்டத்திற்கு இன்று (9-9-2025) காலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை புரிந்தார். அவரை வரவேற்கும் விதமாக மத்தியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் இன்று காலை அரியலூர் நகருக்கு சென்று அவரை நேரில் வரவேற்றார்.

News September 9, 2025

அரியலூர்: உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நீதி உதவி

image

அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையத்தில் பணிபுரிந்து உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதல்நிலைக் காவலர் செல்வம் அவர்களது குடும்பத்திற்கு அரியலூர் மாவட்ட காவல்துறையினரின் பங்களிப்பு நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி வழங்கினார்கள். உடன் செந்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையின் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!