News October 22, 2025

அரியலூர்: பேரிடர் கால தகவல் எண்கள் வெளியீடு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அரியலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை சார்பாக மழைகளின் போது, TN Alert செயலி பேரிடர் காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க உதவுகிறது. அரியலூர் மாவட்டத்தில் பேரிடர் கால கட்டுப்பாட்டு மைய எண்கள்: 1077, 04329 – 228709. வாட்ஸ்அப் – 9384056231 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 3, 2026

அரியலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News April 3, 2026

அரியலூர்: தெரிவு முறை பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள நுண் பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறை பணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்துகொண்டு முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்யும் பணியினை பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல்.02) இரவு 10 முதல், இன்று (ஏப்ரல்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!