News April 22, 2025

அரியலூர்: பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தல்

image

அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பொறுப்பு ஆணையர் அசோக்குமார் பேசும்போது, “அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். தமிழ் பெயர் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்” என கூறினார்.

Similar News

News November 6, 2025

அரியலூர்: கல்வி உதவிதொகை வேண்டுமா?

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவிதொகை திட்டத்தில், OBC, EBC, DNT பிரிவை சேர்ந்த பட்டியலிடப்பட்ட (டாப் கிளாஸ் ஸ்கூல்ஸ்) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களை Scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News November 6, 2025

அரியலூர்: சட்ட உதவி பாதுகாப்பு மையம் துவக்கம்

image

அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அரியலூரில் உள்ள பல்துறை வளாகத்தில் நவம்பர் 5-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இதில் அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர் வாலண்டினா கலந்துகொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 6, 2025

அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…

error: Content is protected !!