News September 8, 2025
அரியலூர்: பெண் குழந்தைகளுக்கு விருது!

அரியலூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, பாடுபட்டு சாதனை புரிந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் சார்பில், சிறந்த பெண் குழந்தைக்கான விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கிக் கௌரவிக்கப்படும். இந்த விருதுக்கு நவ.29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
அரியலூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறை ஆய்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி ஆய்வு செய்தார், ஆய்வில் பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
அரியலூர் ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஆசிரியர்கள்

அரியலூர் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்கள் ம.குணபாலினி, த.பெரியசாமி, அ.பெலிக்ஸ் அமலன் பட்டதாரி ஆசிரியர்கள் பி.சார்லஸ் ஆரோக்கியசாமி, வி.எமல்டா குயின்மேரி, சு.ஆறுமுகம் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News September 8, 2025
ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும் சாலை, பணியாளர்களின் 41 மாதம் பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.