News November 14, 2025
அரியலூர்: புனித பயணத்திற்கு மானியம் அறிவிப்பு

தமிழகத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு https://www.bcmbcmw.tn.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின விழா

வரும் மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (06.03.2026) மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து எடுத்துரைத்தார். இதில் ஏராளமான பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
News March 7, 2026
அரியலூர்: சட்டவிரோத கள் இறக்கம்-ஒருவர் மீது வழக்கு!

அரியலூர் மாவட்டம், தா.பழூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோடாலி கருப்பூர் கிராமம் அருகே அமைந்துள்ள பொன்னாற்றங்கரை அருகே மணிமொழி என்பவரது வயலில் அரசால் தடை செய்யப்பட்ட கள் இறக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தற்போது விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மண்டகப்படி தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் மீது தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
News March 7, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.


