News October 27, 2025

அரியலூர்: புகையிலை விற்றவர் கைது

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முத்துசேர்வாமடத்தை சேர்ந்த ஐயப்பன் (39) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனையறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து 2.700 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 27, 2025

அரியலூர்: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்து பயனர் உள்நுழைவில் ரேஷனில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 27, 2025

அரியலூர்: இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (அக்.27) இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 27, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.26) இரவு 10 மணி முதல் இன்று (அக்.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!