News December 16, 2025
அரியலூர்: பாலியல் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூர் மாவட்டத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு இராயம்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று, அந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வழக்கில் அரியலூர் மகளிர் நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News December 19, 2025
அரியலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் உதவி

அரியலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
அரியலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் உதவி

அரியலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
அரியலூர்: சிறந்த காவலர்களுக்கு பாராட்டு

அரியலூர் மாவட்ட காவல்துறையில், பல்வேறு காவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை சிறப்பிக்கும் விதமாக, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி நேற்று நேரில் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


