News March 4, 2026
அரியலூர்: பாமகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் அறிவுறுத்தலின்படி, அன்புமணி ராமதாஸ் தரப்பைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதன் ஒரு பகுதியாக நேற்று ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குவாகம், வல்லம், மருதூர், கொடுகூர் உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
Similar News
News March 7, 2026
அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

அரியலூர் நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயணித்து வந்த கட்சிகளில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.
News March 7, 2026
அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

அரியலூர் நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயணித்து வந்த கட்சிகளில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.
News March 7, 2026
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின விழா

வரும் மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (06.03.2026) மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து எடுத்துரைத்தார். இதில் ஏராளமான பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.


