News February 3, 2026

அரியலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 9, 2026

வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மடிக்கணினி

image

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் பணிபுரியும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மடிகணினிகளை வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News February 9, 2026

அரியலூரில் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியர்!

image

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு மாற்று திறனாளிக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியினை வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கலந்து கொண்டார்.

News February 9, 2026

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம்- எஸ்பி பங்கேற்பு

image

தமிழகத்தில் ஆண்டுதோறும் பிப்- 9 ந்தேதி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் இன்று நடைப்பெற்றது. மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை வகித்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை எந்த முறையில் வந்தாலும் அதனை அடையாளம் கண்டு தடுப்பேன் என உறுதிமொழி ஏற்கபட்டது.

error: Content is protected !!