News November 19, 2025
அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News November 21, 2025
அரியலூர்: படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன்!

அரியலூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், கல்வி கடன் மேளா அரியலூர் ஆட்சியரகத்தில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன்!

அரியலூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், கல்வி கடன் மேளா அரியலூர் ஆட்சியரகத்தில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள கூவத்தூர் பஸ் ஸ்டாப் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது, பேருந்து பின் சக்கரம் ஏறியதில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு, 108 மூலம் ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


