News November 21, 2025
அரியலூர்: படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன்!

அரியலூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், கல்வி கடன் மேளா அரியலூர் ஆட்சியரகத்தில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
அரியலூர் மாவட்டம் உதயமான தினம் இன்று

அரியலூர் மாவடத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 23, 2007யில் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால், இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்ற புனைபெயருடன் பரவலாக அழைக்கப்படுகிறது.
News November 23, 2025
அரியலூர் மாவட்டம் உதயமான தினம் இன்று

அரியலூர் மாவடத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 23, 2007யில் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால், இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்ற புனைபெயருடன் பரவலாக அழைக்கப்படுகிறது.
News November 23, 2025
அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

அரியலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!


