News September 25, 2025

அரியலூர்: நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்ட போட்டிக்கு இணையான, நெடுந்தூர ஓட்ட போட்டிகள் செப்டம்பர் 28ஆம் தேதி காலை 7:30 மணியளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்தப் போட்டிகளின் விவரங்கள் தொடர்பாக, அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

Similar News

News September 25, 2025

அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் இன்று காலை வரை பெய்த மழையளவு விபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் வெளியிடபட்டுள்ளது. அதன்படி அரியலூரில் 0.4 மி.மீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 27 மி.மீட்டரும், செந்துறையில் 11 மி.மீட்டரும், ஆண்டிமடத்தில் 5 மி.மீட்டரும், சித்தமல்லி டேமில் 13 மி.மீட்டரும், தா.பழூரில் 12 மி.மீட்டரும் மழைபதிவாகியுள்ளது. மேலும் மொத்த மழையளவு 68.4 மி.மீட்டர் ஆகும்.

News September 25, 2025

அரியலூர் இளைஞர்களே Bank வேலை வேண்டுமா?

image

அரியலூர் மக்களே தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? உங்களை தேடி வரும் Bank வேலையை மிஸ் பண்ணாதீங்க! பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. வேலை தேடும் உங்கள் உறவினருக்கும் SHARE பண்ணுங்க!

News September 25, 2025

அரியலூர் மாவட்டத்தில் 1,500 மரக்கன்றுகள் நடல்

image

அரியலூரை அடுத்த வாரணவாசி ஊராட்சியில் நேற்று (செப்.24) பசுமை தமிழ்நாடு இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதில், வனத்துறை சார்பில் 1,500 நாவல், பனை மற்றும் வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆட்சியர் பொ.ரத்தினசாமி மரக்கன்றுகளை நட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!