News March 29, 2025
அரியலூர்: தீராத தோஷங்களை தீர்க்கும் சனீஸ்வர பகவான்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள அம்பலவர்கட்டளை கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு அடுத்ததாக நவகிரகங்கள் அமைக்கப்படாமல் சனீஸ்வர பகவானுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் சனிப்பெயர்ச்சியன்று இங்குள்ள சனீஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. SHARE NOW!
Similar News
News April 1, 2025
பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலந்துறையார் கோயில்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ளது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் கோயில். இங்குள்ள மூலவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி ஆவர். சிவபெருமானை பிரிந்து சென்ற பார்வதி தேவி இங்கு தவம் செய்து மீண்டும் சிவபெருமானுடன் சேர்ந்தார். ஆகையால் இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியரும் சேருவர் என கூறுகின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் மாத்ருஹத்தி தோஷம், திருமணத் தடை போன்றவையும் நீங்கும் என்கின்றனர். இதை பகிரவும்
News April 1, 2025
அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <
News April 1, 2025
ஜெயங்கொண்டம்: மூதாட்டியை தாக்கிவிட்டு திருட்டு முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (42). இவர் கூலி வேலைக்காக மேலமைக்கேல்பட்டி கிராமத்திற்கு சென்றபோது, அங்குள்ள ஒரு வீட்டில் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் இருந்த 95 வயது மூதாட்டி சத்தமிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். இதனால் அந்த மூதாட்டியை தாக்கியுள்ளார்.அப்போது பொதுமக்களே அவரை பிடித்து கட்டி வைத்து தா.பழூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.