News November 8, 2025

அரியலூர்: தீப்பிடித்து எரிந்த கொட்டகை!

image

சூசையப்பர்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த லாரன்ஸ் (40). விவசாயியான இவருக்கு மேற்கூரையாக கொண்ட கொட்டகை ஒன்று உள்ளது. இதில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென அந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த கொட்டகையில் இருந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், சைக்கிள் மற்றும் உரமூட்டைகள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இது குறித்த புகாரின் பெயரில் உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 8, 2025

அரியலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233137>>பாகம்-2<<>>)

News November 8, 2025

அரியலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

News November 8, 2025

அரியலூர்: முதியோர் இல்லங்களில் ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் ராஜாஜி நகர் மற்றும் கொல்லாபுரத்தில் உள்ள முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், முதியோர்கள் பொழுது போக்குவதற்கான வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்த ஆட்சியர், முதியோர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

error: Content is protected !!