News April 12, 2025
அரியலூர்: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News November 6, 2025
அரியலூர்: சட்ட உதவி பாதுகாப்பு மையம் துவக்கம்

அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அரியலூரில் உள்ள பல்துறை வளாகத்தில் நவம்பர் 5-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இதில் அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர் வாலண்டினா கலந்துகொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 6, 2025
அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…
News November 6, 2025
கடலுக்கு அடியில் அரியலூர்

மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்ததாகவும், பின் காலநிலை மாற்றங்களால், கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போதைய நிலம் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்ங்க…


