News November 9, 2025
அரியலூர்: தனிமையில் இருந்த இளைஞர் தற்கொலை

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முள்ளுக்குறிச்சி வடக்குத்தெரு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
அரியலூர்: SIR கணக்கெடுப்புக்கு உதவி மையம்!

அரியலூ மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்படும் எந்தவொரு சந்தேகத்திற்கும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். எனவே இதனை பயண்படுத்தி கணக்கெடுப்புப் படிவங்களை சரியாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
அரியலூர்: ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்பி

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்குக்கான எழுத்துத் தேர்வு இன்று (நவ.09) நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (நவ.08) தேர்வு நடைபெறும் மையங்களை ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு பணிகளுக்கு செல்லும் காவல்துறையினருக்கு அறிவுரையும் வழங்கினார்.


