News December 25, 2025
அரியலூர்: தங்க விலை உயர்வு-பெண்கள் நூதன போராட்டம்

தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் ஒன்றுகூடி தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யப்படுவதை கண்டித்தும், தங்கம் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நூதன போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கையில் தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கட்டப்பட்ட கயிற்றை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Similar News
News January 30, 2026
அரியலூர்: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 2026 மாதம் 2, 3 தேதிகளில் 481 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 23,288 பயனாளர்களின் இல்லங்களுக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
அரியலூர்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் அலுவலகத்தில் (ஜன. 31) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News January 30, 2026
அரியலூர்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் அலுவலகத்தில் (ஜன. 31) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.


