News September 5, 2025

அரியலூர் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

இன்று (செப்டம்பர் 5) வெள்ளிக்கிழமை மிலாடி நபி தினத்தையொட்டி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் முழுமையாக மூடப்படும் என்றும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

Similar News

News September 5, 2025

அரியலூர்: ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்துடன் கடன்

image

அரியலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 5000 ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு. பொ. ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News September 5, 2025

அரியலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

அரியலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 5, 2025

அரியலூர்: தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் உள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான எந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படவுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!