News September 9, 2025
அரியலூர்: சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு

தமிழ்நாடு அரசின் மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் மாவட்ட மாநகர அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசு வழங்கப்படுகிறது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசினை மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பாஸ் சாஸ்திரி வழங்கினார்.
Similar News
News September 9, 2025
அரியலூர்: ஆசிரியர் தேர்வுக்கு நாளை கடைசி நாள்!

அரியலூர் மக்களே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே <
News September 9, 2025
அரியலூர் வருகை புரிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

அரியலூர் மாவட்டத்திற்கு இன்று (9-9-2025) காலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை புரிந்தார். அவரை வரவேற்கும் விதமாக மத்தியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் இன்று காலை அரியலூர் நகருக்கு சென்று அவரை நேரில் வரவேற்றார்.
News September 9, 2025
அரியலூர்: உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நீதி உதவி

அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையத்தில் பணிபுரிந்து உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதல்நிலைக் காவலர் செல்வம் அவர்களது குடும்பத்திற்கு அரியலூர் மாவட்ட காவல்துறையினரின் பங்களிப்பு நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி வழங்கினார்கள். உடன் செந்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையின் கலந்து கொண்டனர்.