News October 17, 2025

அரியலூர்: சாலையில் தடுப்புகள் அமைப்பு

image

அரியலூர் தவுத்தாய் குளம் ரவுண்டானாவில் இருந்து செந்துறை ரவுண்டானா வரை உள்ள புறவழிச்சாலையை புதிய சாலையாக அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் இப்புறவழிச்சாலையில் சாலை தடுப்புகள் மற்றும் சாலையில் சென்டர் மீடியனாக பேரல்கள் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Similar News

News October 18, 2025

அரியலூர்: அழகு கலை பயிற்சி பெற அழைப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு திறன் அடிப்படையில் ஓப்பனை, அழகுக்கலை மற்றும் TATTOO குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். SHARE IT NOW…

News October 18, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 17, 2025

பெண் காவலர்களுக்கு ஓய்வு அறையை திறந்து வைத்த எஸ்பி

image

அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்வேஷ் இன்று (அக்.17) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஓய்வு அறையை திறந்து வைத்தார். பணிபுரியும் பெண் அமைச்சு பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் பணி இடைவெளி நேரத்தில் ஓய்வு எடுக்கவும், கர்ப்பிணிகளுக்கு, உடல்நிலை சரியில்லாதவர்கள் பயன்பெறு வகையிலும், மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், புத்துணர்ச்சி பெறவும் குறிஞ்சி மகளிர் ஓய்வு அறை திறக்கப்பட்டது.

error: Content is protected !!