News October 26, 2025

அரியலூர்: காவல் நிலையங்களில் எஸ்.பி ஆய்வு

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (அக்.25) தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வினை நடத்தினார். ஆய்வின்போது சட்டவிரோத செயல்கள் மற்றும் பொதுமக்கள் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாஷா, உதவி ஆய்வாளர் தனஞ்செழியன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 30, 2026

அரியலூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

அரியலூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<> Aadhaar மொபைல் APP<<>>-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 30, 2026

அரியலூர்: நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அறிவிப்பு

image

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

அரியலூர்: நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அறிவிப்பு

image

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!