News December 11, 2025

அரியலூர் காவல் துறை சார்பாக பொது ஏலம்

image

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் இன்று பொது ஏலம் விடப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி தலைமையில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அதன்படி 12 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு மொத்த விற்பனை ஏலத்தொகையாக ரூ.2,72,934 அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

Similar News

News December 15, 2025

அரியலூர்: அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் மடிக்கணினி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர்களை இழந்த மூன்று மாணவர்களுக்கு ஆட்சியர் ரத்தினசாமி மடிக்கணினி வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மூன்று மாணவர்களும் மடிக்கணினி பெற்றுக் கொண்டு தங்கள் படிப்புக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

News December 15, 2025

அரியலூர்: ரூ.1000 வரலையா இத பண்ணுங்க!

image

அரியலூர் மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.<>இங்கு <<>>கிளிக் செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 15, 2025

அரியலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊர் புறநகர் புர வாழ்வாதார இயக்கம் சார்பில், வருகிற 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

error: Content is protected !!