News August 27, 2025
அரியலூர்: கார் மோதி முதியவர் பலி

அரியலூர் மாவட்டம் பொட்டை கொல்லை அருகே கார், பைக் மோதலில் (65) வயது முதியவர் உயிரிழந்தார். சாலையில் பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த கார் திடீரென மோதியது. கடுமையாக காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, கார்டுக்காக மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
அரியலூர்: குளத்தில் மூழ்கி பெண் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள நாச்சியார் குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரம் பள்ளிக்கூட தெருவைச் சார்ந்த ரவி என்பவர் மனைவி பஞ்சவர்ணம் என்பது பின்னர் தெரியவந்தது. மேலும் இவர் கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
News March 6, 2026
அரியலூர்: உழவர் நல சேவை மையங்களில் ஆய்வு!

தமிழக முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்ட வேளாண்மை படிப்பு தோட்டக்கலை படிப்பு பட்டதாரிகளுக்காக, உழவர் நல சேவை மையம் தொடங்கப்பட்டது. அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் 12 உழவர் நல சேவை மையங்கள் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இதில் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள சுந்தரேசபுரம், சுத்தமல்லி, நடுவலூர், வெண்மான் கொண்டான் உள்ளிட்ட உழவர் நல சேவை மையங்களை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
News March 6, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


